திருச்சியில் இன்று உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 11 வது கிராஸில் உள்ள ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவக கூட்டரங்கில் சாதனையாளர்கள் களம் ( சீசன் 2) வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு Stv தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமையேற்று சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆப்பிள் மில்லட் சிறுதானிய உணவகத்தின் நிர்வாக இயக்குநரும் Wisdom International School ன் தாளாளருமான .D.வீரசக்தி முன்னிலை வகித்தார்.
மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட சமூக சேவகர் S.M.சிவக்குமார் அனைவரையும் வாழ்த்தி கருத்துரையாற்றினார் .
மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் சாதனையாளர்கள் களம் நிகழ்ச்சியின் இயக்குனரும் தொகுப்பாளருமான ஆர்.ஏ.தாமஸ் சாதனையாளர்கள் களம் (சீசன் 2)நிகழ்ச்சி குறித்து விளக்கி பேசினார் .
நிகழ்வில் சர்வதேச தடகள விளையாட்டு வீரர் மணிகண்ட ஆறுமுகத்தின் பிறந்த நாள் விழாவினை கேக் வெட்டி சிறப்பாக அனைவரும் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஆறுமுகம் Kalalayaa Arts & Cultural Academy பள்ளியின் இயக்குநர் பேராசிரியரர் Dr.மரகதம் ஓவியம் வரைந்து உலக சாதனை படைத்த தரனிகா தன்னார்வலர் சித்ரா மூர்த்தி, M.ரம்யா, நட்சத்திரா,தடகள விளையாட்டு வீரர்கள் இலக்கியதாசன், சோரோ,பிரபு,ரமேஷ், கார்த்திக்,சுரேஷ், மோகன், சரவணன்,பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் சாதனையாளர்கள் களம் நிகழ்ச்சியின் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் நன்றி கூறினார்