Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

+2 பொதுத்தேர்வு குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆலோசனை.

0

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உயர் அதிகாரிகளுடன் தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, 10-ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது பற்றி கருத்து கேட்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகவும் கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறித்தி உள்ளார்.

மற்ற மாநிலங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் மதிப்பெண் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலோசனை முடிவுகளை முதல்வரிடம் தெரிவித்து அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.