Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கலாமா ? மருத்துவ குழுவினருடன் முதல்வர் ஆலோசனை.

0

தமிழகத்தில் கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது, ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவம் நிபுணர்கள் குழுவினருடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் கொரோனான் பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் 24-ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. நோய் பரவல் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்து உள்ளது. இருப்பினும் தினமும் 500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு இம்மாதம் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

எனவே ஊரடங்கு நீட்டிப்பு, நீட்டிக்கலாமா.?
அல்லது தளர்வு அறிவிக்கலாமா.? என்பது குறித்தும், கொரோனா பரவலை முற்றிலும் தடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முதலமைச்சர் (இன்று) 29-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பிறகு மாலை மருத்துவ நிபுணர்கள் உடன் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்.

Leave A Reply

Your email address will not be published.