Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் கரையைக் கடக்கிறது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் கரையைக் கடக்கிறது

0

 

*இன்னும் சில மணி நேரங்களில்  கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! வானிலை ஆய்வு மையம் தகவல்!*

மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல்  பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும் சுந்தர்பன் காடுகளுக்கு இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு  வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம், கடலோர தமிழகம்  மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பள்ளிப்பட்டு  (திருவள்ளூர் மாவட்டம்) 17 சென்டி மீட்டர் , ராம கிருஷ்ண ராஜு பேட்டை (திருவள்ளூர் மாவட்டம்) 13 சென்டி மீட்டர் , தாமரைப்பாக்கம்  (திருவள்ளூர் மாவட்டம்), ஸ்ரீபெரும்புதூர்  (காஞ்சிபுரம் மாவட்டம்) தலா 11 சென்டி மீட்டர் , திருத்தணி  (திருவள்ளூர் மாவட்டம்), திருத்தணி  P.T.O (திருவள்ளூர் மாவட்டம்) தலா 9 சென்டி மீட்டர் ,  மதுராந்தகம்  (செங்கல்பட்டு மாவட்டம்), திருவள்ளூர்  (திருவள்ளூர் மாவட்டம்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை மாவட்டம்), உத்திரமேரூர்  (காஞ்சிபுரம் மாவட்டம்), கும்மிடிப்பூண்டி  (திருவள்ளூர் மாவட்டம்), வேம்பாக்கம்  (திருவண்ணாமலை மாவட்டம்), புதுச்சேரி  (புதுச்சேரி மாநிலம் ) தலா 7 சென்டி மீட்டர் ,  திருவாலங்காடு  (திருவள்ளூர் மாவட்டம்), சோழிங்கநல்லூர்  (சென்னை மாவட்டம்), செய்யூர்  (செங்கல்பட்டு), அரக்கோணம்  (ராணிப்பேட்டை மாவட்டம்), ரெட்  ஹில்ஸ்  (திருவள்ளூர் மாவட்டம்) தலா 6 சென்டி மீட்டர் , கொரட்டூர்  (திருவள்ளூர் மாவட்டம்), பொன்னேரி  (திருவள்ளூர்), ஆலந்தூர்  (சென்னை மாவட்டம்), சென்னை  விமானநிலையம் (சென்னை மாவட்டம்), காஞ்சிபுரம்  (காஞ்சிபுரம் மாவட்டம்), கேளம்பாக்கம்  (செங்கல்பட்டு மாவட்டம்), காவேரிப்பாக்கம்  (ராணிப்பேட்டை மாவட்டம்), பெரம்பூர்   (சென்னை மாவட்டம் ) தலா 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

நேற்று மத்தியமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இன்னும் சில மணி நேரங்களில் சாகர் தீவு மற்றும் சுந்தர்பன் காடுகளுக்கு இடையே கரையை கடக்கும்.
மேலும், வடக்கு வங்க கடல் பகுதிகள்    சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் அப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.